செய்திகள்
கோப்புபடம்

சாத்தூர் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது

Published On 2021-05-30 12:38 GMT   |   Update On 2021-05-30 12:38 GMT
சாத்தூர் அருகே புகையிலை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படந்தால் வசந்தம் நகரில் பெட்டி கடையில் வைத்து புகையிலை விற்ற அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 50) என்பவரிடம் இருந்து 300 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். 

அதேபோல அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மன்னார்கோட்டையில் வீட்டின் முன்பு வைத்து புகையிலை விற்ற நவநீதகிருஷ்ணன் (30) என்பவரிடம் இருந்து 192 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News