செய்திகள்
கோப்புபடம்

மயிலாடுதுறை அருகே கள்ள சாராயம் குடித்த 2 பேர் பலி

Published On 2021-05-30 16:37 IST   |   Update On 2021-05-30 16:37:00 IST
மயிலாடுதுறை அருகே கள்ள சாராயம் குடித்த 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சியது யார்? அது வி‌ஷ சாராயமா? அல்லது வேறு ஏதுமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே உள்ள சேந்தங்குடி வள்ளாலகரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 38), குப்பன்குளத்தை சேர்ந்தவர் கந்தசெல்வம் (42).

தற்போது ஊரடங்கால் டாஸ்மாக் மூடப்பட்டுள்ளதால் இவர்களால் மதுகுடிக்காமல் இருக்க முடியவில்லை. இதனால் திருட்டுதனமாக காய்ச்சப்பட்ட கள்ள சாராயத்தை குடித்தனர். இவர்களுடன் அதே கிராமத்தை சேர்ந்த சுந்தர், கருப்பன், வீரமணி ஆகியோரும் சாராயம் குடித்தனர்.

இந்நிலையில் பிரபு, கந்தமுருகனுக்கு திடீரென கண் பார்வை மங்கியது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் இறந்தனர். மேலும் அவர்களுடன் சாராயம் குடித்த சுந்தர் உள்ளிட்ட 3 பேரும் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றி மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சியது யார்? அது வி‌ஷ சாராயமா? அல்லது வேறு ஏதுமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News