செய்திகள்
பூம்புகார் மீனவர் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
திருவெண்காடு:
பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு சீர்காழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஒன்றிய ஆணையர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவரும், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சசிக்குமார் வரவேற்றார். இதில் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், பூம்புகார் தொகுதியில் முதல் முறையாக 18 வயதுக்கு மேல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துள்ளேன். பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்றார்.இதில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர் துரைகார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பவல்லி ராஜா, மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ரவி நன்றி கூறினார். முகாமில் 286 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.