செய்திகள்
தற்கொலை

புதுவை அருகே முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-05-11 11:04 GMT   |   Update On 2021-05-11 11:04 GMT
புதுவையில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை ஆம்பூர் சாலையை சேர்ந்தவர் முகமதுயாகூப் (வயது66) இவருக்கு நுர்ஜகான் (55) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

மகளுக்கு திருமணமாகி அவரது கணவர் வெளி நாட்டில் வேலை செய்து வருவதால் முகமதுயாகூப் வீட்டிலேயே அவரது மகள் வசித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த 2 ஆண்டுகளாக சிறுநீர் பிரச்சினையால் முகமதுயாகூப் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து மாத்திரையும் சாப்பிட்டு வந்தார்.

சம்பவத்தன்று அதிகாலை முகமதுயாகூப்புக்கு சிறுநீர் கழிக்கும் போது அதிக வலி ஏற்பட்டதால் அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் வீட்டுக்கு வந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் மாடியில் கட்டில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார். இதனை கண்ட அவரது மனைவி நுர்ஜகான் சத்தம் போட்டு அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து முகமதுயாகூப்பை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை முகமதுயாகூப் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News