செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் புதிதாக 2,049 பேருக்கு கொரோனா பாதிப்பு- 30 பேர் உயிரிழப்பு

Published On 2021-05-11 07:43 GMT   |   Update On 2021-05-11 07:43 GMT
புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 2049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 2049 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுச்சேரியில் இதுவரை 75 ஆயிரத்து 024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,018  பேர் உயிரிழந்து உள்ளனர். 
Tags:    

Similar News