செய்திகள்
திருட்டு

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Published On 2021-05-09 11:52 GMT   |   Update On 2021-05-09 11:52 GMT
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் பழனிசாமி நகரை சேர்ந்தவர் ராஜே‌‌ஷ் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மஞ்சினி (45). தனியார் கம்பெனி ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் அவரின் மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மங்கலம் போலீசில் மஞ்சினி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News