செய்திகள்
திருக்கடையூரில் கொரோனா பரிசோதனை முகாம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருவதால் அரசு துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கொரோனா தொற்று 2-வது அலை அதிகரித்து வருவதால் அரசு துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து திருக்கடையூர் சுற்றுப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் டக்டர் கார்த்திக்சந்திரகுமார் தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.