செய்திகள்
கைது

திருவையாறு அருகே செல்போன் திருடிய 4 வாலிபர்கள் கைது

Published On 2021-04-30 09:52 GMT   |   Update On 2021-04-30 09:52 GMT
திருவையாறு அருகே செல்போன் திருடிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவையாறு:

திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை மேலத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(55) இவர் கடந்த 27-ம் தேதி தஞ்சையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீரசிங்கம்பேட்டைக்கு வந்துகொண்டிருந்தார். கண்டியூர் மெயின்ரோட்டில் குறிஞ்சி கல்யாணமண்டபம் அருகே பின்னாள் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கிருஷ்ணமூர்த்தி செல்போனை பறித்து சென்றுவிட்டனர். இது சம்மந்தமாக நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோஸ்பின்சிசாரா, ஜம்புலிங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்த நிலையில் அம்மன்பேட்டை ஆர்ச் அருகே 4 பேர் சந்தேகத்தின்பேரில் நிற்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று 4 பேரை பிடித்து விசாரித்ததில் கண்டியூர் காளியம்மன் கோவில் தெரு சரவணன் மகன் சந்தோஷ் (20), திருவையாறு பங்களா தெரு சேகர் மகன் மணிமாறன்(19), கண்டியூர் ஐய்யனார்கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் சூர்யா(20), மேலத்திருந்பூந்துருத்தி காளியம்மன்கோவில் தெரு மகேந்திரன் மகன் பாலமுருகன்(21) என்பதும் இவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபடுவதும் தெரியவந்தது, அவர்களிடமிருந்து 13 செல்போன், 2 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். வழக்கு பதிவு செய்தனர். மேலும் 4 பேரையும் கைது செய்து திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News