செய்திகள்
கோப்புபடம்

ஆலங்குளத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-04-29 14:51 GMT   |   Update On 2021-04-29 14:51 GMT
ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் டி.என்.சி.முக்கு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம்:

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அவ்வாறு அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் ஆலங்குளம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் டி.என்.சி.முக்கு ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாத 60 பேருக்கு அவர்கள் அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News