செய்திகள்
நாகையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் பால் வியாபாரி கைது
நாகையில் மனநலம் பாதித்த சிறுமியை பலாத்காரம் செய்த பால் வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கருவேலங்கடை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன்(39). பால் வியாபாரி. இவர் நாகையில் பாபாக்கோவில் பகுதியில் உள்ள வீடுகளில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை சுந்தரபாண்டியன் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாத்தாவிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.