செய்திகள்
காரியாபட்டி அருகே தாய்-மகள்-பேத்தி விஷம் குடித்து தற்கொலை
காரியாபட்டி அருகே தாய், மகள், பேத்தி ஒரே நேரத்தில் தற்கொலை செய்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 45). இவர்களுக்கு 2 மகன்களும், ஜெயலலிதா (17) என்ற மகளும் உள்ளனர்.
முத்துசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள் ஜெயலலிதாவுடன் தனியாக முனியம்மாள் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
வழக்கமாக அதிகாலையில் எழுந்து விடும் முனியம்மாள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கூலி வேலைக்காக சென்று விடுவார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் முனியம்மாள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு முனியம்மாளும், ஜெயலலிதாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதனால் தாயும், மகளும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முனியம்மாளின் தாயார் அடைக்கலம் (65) அதே பகுதியில் தான் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஊர் மக்கள் சென்றபோது அங்கு தோட்டத்தில் கட்டிலில்அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆவியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி தலைமையில், போலீசார் சம்ப இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய், மகள், பேத்தி ஒரே நேரத்தில் தற்கொலை செய்திருப்பது காரியாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 45). இவர்களுக்கு 2 மகன்களும், ஜெயலலிதா (17) என்ற மகளும் உள்ளனர்.
முத்துசாமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் மகள் ஜெயலலிதாவுடன் தனியாக முனியம்மாள் வசித்து வந்தார். அவரது 2 மகன்களும் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர்.
வழக்கமாக அதிகாலையில் எழுந்து விடும் முனியம்மாள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு கூலி வேலைக்காக சென்று விடுவார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை தட்டிப் பார்த்தனர். ஆனால் முனியம்மாள் வீட்டில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்தவர்கள் வீட்டை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு முனியம்மாளும், ஜெயலலிதாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்தன. இதனால் தாயும், மகளும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முனியம்மாளின் தாயார் அடைக்கலம் (65) அதே பகுதியில் தான் தனியாக வசித்து வந்துள்ளார். அவரிடம் தகவல் தெரிவிப்பதற்காக ஊர் மக்கள் சென்றபோது அங்கு தோட்டத்தில் கட்டிலில்அடைக்கலமும் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆவியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி தலைமையில், போலீசார் சம்ப இடம் விரைந்து வந்தனர். பிணமாக கிடந்த 3 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய், மகள், பேத்தி ஒரே நேரத்தில் தற்கொலை செய்திருப்பது காரியாபட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.