செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-04-24 17:23 IST   |   Update On 2021-04-24 17:23:00 IST
சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.
சிவகாசி:

சிவகாசி பகுதியில் உள்ள அச்சகங்கள், பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஆலைக்கே சென்று கொரோனா தடுப்பூசிகளை சிவகாசி சுகாதாரத்துறை அதிகாரிகள் போட்டு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு 61 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் டாக்டர் ஷாஜிதா, சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Similar News