செய்திகள்
தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-04-24 15:35 IST   |   Update On 2021-04-24 15:35:00 IST
திருக்காட்டுப்பள்ளி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அகரைப்பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆண்டிஅய்யா(வயது65). விவசாயி. இவர் கடந்த 18-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதியாகி கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News