செய்திகள்
புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 5 பேர் பலி
சமீப காலமாக வெளிவரும் வதந்தி காரணமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதிக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. 2-வது அலை வேகமாக பரவி வருவதே இதற்கு காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 3 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 565 பேருக்கு தொற்று உறுதியானது. 336 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 48 ஆயிரத்து 336 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 843 பேர் ஆஸ்பத்திரியிலும், 3 ஆயிரத்து 849 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 4 ஆயிரத்து 692 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 42 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 31 பேரும், முன்கள பணியாளர்கள் 30 பேரும், பொதுமக்கள் 1,404 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 16-ந்தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 82 பேர் தடுப்பூசி போட்டிருந்தனர். 17-ந்தேதி 7 ஆயிரத்து 432 பேரும், 18-ந்தேதி 4 ஆயிரத்து 978 பேரும் தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.
ஆனால் தற்போது 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சமீப காலமாக வெளிவரும் வதந்தி காரணமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 209 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை மாநிலத்தில் கடந்த மார்ச் 1-ந்தேதிக்குப் பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. 2-வது அலை வேகமாக பரவி வருவதே இதற்கு காரணம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், 3 ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 565 பேருக்கு தொற்று உறுதியானது. 336 பேர் குணமடைந்து உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதுச்சேரியில் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 713 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 48 ஆயிரத்து 336 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 843 பேர் ஆஸ்பத்திரியிலும், 3 ஆயிரத்து 849 பேர் வீடுகளிலும் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 4 ஆயிரத்து 692 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 42 ஆயிரத்து 931 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 31 பேரும், முன்கள பணியாளர்கள் 30 பேரும், பொதுமக்கள் 1,404 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 16-ந்தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் ஒரே நாளில் 9 ஆயிரத்து 82 பேர் தடுப்பூசி போட்டிருந்தனர். 17-ந்தேதி 7 ஆயிரத்து 432 பேரும், 18-ந்தேதி 4 ஆயிரத்து 978 பேரும் தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.
ஆனால் தற்போது 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சமீப காலமாக வெளிவரும் வதந்தி காரணமாகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 209 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.