செய்திகள்
கொரோனா வைரஸ் குறித்து ஒலிபெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு
காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காரைக்கால்:
காரைக்காலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நலவழித்துறைசார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
காரைக்காலில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நலவழித்துறைசார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் உத்தரவின் பேரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் கோட்டுச்சேரி போலீசார் பஸ்நிறுத்தம், பஸ் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.