செய்திகள்
கோப்புபடம்

மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தீக்குளிப்பு

Published On 2021-04-16 14:17 GMT   |   Update On 2021-04-16 14:17 GMT
தளவாய்புரம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தளவாய்புரம்:

தளவாய்புரம் அருகே உள்ள செட்டியார்பட்டி ரங்கநாத புரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 35). கூலித்தொழிலாளி. இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக இவர் வேலைக்கு போகவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு தன் மனைவியிடம் மது குடிக்க பணம் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. 

ஆனால் அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் ராமச்சந்திரன் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News