செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே விவசாயி தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கால்வேஹள்ளி பக்கமுள்ள கத்தேரிமேல்கொட்டாயை சேர்ந்தவர் காவேரி (வயது 60). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட இவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.