செய்திகள்
கோப்புபடம்

ஓசூரில் முதியவர் தற்கொலை - போலீஸ் விசாரணை

Published On 2021-04-09 20:28 IST   |   Update On 2021-04-09 20:28:00 IST
ஓசூரில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் அருகே பேடரப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோபாலப்பா (வயது 65). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவர் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோபாலப்பா இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News