செய்திகள்
சாத்தூர் அருகே மதுவிற்ற 2 பேர் கைது
சாத்தூர் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீரபாண்டியபுரம் பட்டாசு கடை அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அணைக்கரைபட்டியை சேர்ந்த ஊமைத்துரை (வயது 52) என்பவரிடம் இருந்து 40 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அதேபோல இருக்கன்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் ஸ்டீபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது நென்மேனி ஆற்றில் வைத்து மதுவிற்ற என்.மேட்டுபட்டியை சேர்ந்த நாராயணசாமி (57) என்பவரிடம் இருந்து 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.