செய்திகள்
கோப்புபடம்

மத்தூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலி

Published On 2021-04-05 09:11 GMT   |   Update On 2021-04-05 09:11 GMT
மத்தூர் அருகே பஸ் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர்:

பர்கூர் தாலுகா பெருகோபனப்பள்ளி பக்கமுள்ள பன்னந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 48). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் மத்தூர் அருகே பாரத கோவில் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News