செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், செம்படமுத்தூர் கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு புளிய மரத்தின் அடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் (வயது 37), கோவிந்தராஜ் (29), முனியப்பன் (35), சுப்பிரமணி (40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.