செய்திகள்
நாகமங்கலம் அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலி
நாகமங்கலம் அருகே வாகனம் மோதி வடமாநில தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
உத்தரபிரதேசம் மாநிலம் காசிபூர் மாவட்டம் மர்தா பகுதியை சேர்ந்தவர் ராம்ஜி (வயது 39). இவர் ராயக்கோட்டை அடுத்த நாகமங்கலம் அருகே தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.