செய்திகள்
கோப்புபடம்

சிவகாசி அருகே பெண்ணிடம் பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2021-03-22 13:46 GMT   |   Update On 2021-03-22 13:46 GMT
சிவகாசி அருகே பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

திருத்தங்கல் பாண்டியன்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி சித்ரா (வயது 36). இவர் தனது வீட்டின் அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (34), ராஜகுரு (36) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி சித்ராவிடம் இருந்து ரூ.500-ஐ பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். 

இது குறித்து சித்ரா, திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாசிடம் புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விக்னேஷ்வரன், ராஜகுரு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News