செய்திகள்
கோப்புபடம்

செந்துறை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலி

Published On 2021-03-21 19:53 IST   |   Update On 2021-03-21 19:53:00 IST
செந்துறை அருகே சரக்கு வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்துறை:

செந்துறை அருகே உள்ள சிரங்காட்டுபட்டியை சேர்ந்தவர் சக்தி (வயது 26). பூ விவசாயி. நேற்று இவர், மோட்டார்சைக்கிளில் நத்தத்துக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். குட்டுப்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக சென்ற சரக்குவேன், மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவர் திருமுருகனை (24) கைது செய்தனர். இறந்து போன சக்திக்கு நித்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Similar News