செய்திகள்
கைது

வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண் கைது

Published On 2021-03-14 06:52 IST   |   Update On 2021-03-14 06:52:00 IST
வீட்டில் கஞ்சா பதுக்கி விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியை சேர்ந்தவர் சூரிய முருகன். இவருடைய மனைவி சக்திபிரியா (வயது 30). இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சக்திபிரியா, தனது வீட்டில் 3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்றது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சக்திபிரியாவை பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாம்பரம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News