செய்திகள்
செம்பனார்கோவில் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம்
செம்பனார்கோவில் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் முக்கூட்டில் உள்ள ஒரு காம்பளக்சின் அறையில் 42 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தூக்கில் கிடந்தவர் கிடங்கல் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் வேலை பார்ப்பவர் என்பதும், அவரது காம்பிளக்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரிய வந்தது.
இதையடுத்து பாஸ்கர் மற்றும் சிலரிடம் இறந்தவர் யார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.