செய்திகள்
மரணம்

மயிலாடுதுறை அருகே விஷம் குடித்த பெண் மரணம்

Published On 2021-03-11 22:06 IST   |   Update On 2021-03-11 22:06:00 IST
மயிலாடுதுறை அருகே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் எரவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமு இவரது மனைவி புனிதா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதில் மனமுடைந்த புனிதா கடந்த 7-ந் தேதி விஷத்தை குடித்து வி்ட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். புனிதாவிற்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மேல் விசாரணை மேற்கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்ட புனிதாவிற்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News