செய்திகள்
தற்கொலை

மனைவி கண்டித்ததால் விரக்தி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-03-09 21:08 IST   |   Update On 2021-03-09 21:08:00 IST
கன்னியக்கோவில் அருகே வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:

கன்னியக்கோவில் அடுத்த சுள்ளியாங்குப்பம் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 58), கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுடைய இவர் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது மனைவி சுந்தரி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த பாஸ்கரன் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள ஒருஅறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News