செய்திகள்
கோப்புபடம்

சிவகாசி அருகே தூக்குப்போட்டு மூதாட்டி தற்கொலை

Published On 2021-03-04 15:21 GMT   |   Update On 2021-03-04 15:21 GMT
மூதாட்டி தற்கொலை செய்த சம்பவம் குறித்து மகள் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி:

சிவகாசி தட்டுமேட்டு தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மனைவி சுப்புதாய் (வயது 70). இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்தநிலையில் தனது மகள் முனீஸ்வரியிடம் நோய் கொடுமை அதிகமாக இருப்பதால் இருப்பதை விட இறப்பதே மேல் என்று கூறி உள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் முனீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News