செய்திகள்
கோப்புபடம்

மண்ணிவாக்கத்தில் ஏரியில் மூழ்கி கட்டிட மேஸ்திரி பலி

Published On 2021-03-04 19:30 IST   |   Update On 2021-03-04 19:30:00 IST
மண்ணிவாக்கத்தில் போலீசார் ஏரியில் மூழ்கி இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வண்டலூர்:

திருவண்ணாமலை மாவட்டம் பொண்ணாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 46). இவர் குன்றத்தூரில் தங்கி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மண்ணிவாக்கம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் மண்ணிவாக்கம் தாங்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தார். 

ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற வெங்கடேஷ் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது நண்பர்கள் ஓட்டேரி போலீசில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏரியில் மூழ்கி இறந்த வெங்கடேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News