செய்திகள்
விபத்து பலி

விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலி

Published On 2021-03-01 04:13 GMT   |   Update On 2021-03-01 04:13 GMT
விருதுநகர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் நிலை தடுமாறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் சாத்தூர் ரோட்டில் இ.குமாரலிங்கபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அருகில் கிடந்த அடையாள அட்டையை வைத்து பார்த்தபோது அவர் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பிரான்சிஸ் கோபி என்பது தெரியவந்தது. இதுபற்றி பாண்டிராஜன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News