செய்திகள்
வாகன சோதனை

தரங்கம்பாடி தாலுகாவில் பறக்கும் படையினர் வாகன சோதனை

Published On 2021-03-01 03:49 GMT   |   Update On 2021-03-01 03:49 GMT
தரங்கம்பாடி, கருவி, கிடாரங்கொண்டான், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், ஆறுபாதி, உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பொறையாறு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. எனவே தொடர்ந்து தரங்கம்பாடி தாலுகாவில் 3 தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நேற்று பறக்கும் படை தாசில்தார் ராகவன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பொறையாறு, ராஜீவ்புரம், தரங்கம்பாடி, கருவி, கிடாரங்கொண்டான், கீழையூர், செம்பனார்கோவில், பரசலூர், ஆறுபாதி, உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசியல் கட்சியினர் சாலை ஓரங்களில் வைத்திருந்த பேனர்களை அகற்றினர்.
Tags:    

Similar News