செய்திகள்
கைது

அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரித்த பட்டாசு ஆலைக்கு சீல் - உரிமையாளர் கைது

Published On 2021-02-27 18:28 GMT   |   Update On 2021-02-27 18:28 GMT
தாயில்பட்டி அருகே அனுமதியின்றி பேன்சி ரக வெடிகள் தயாரித்த பட்டாசு ஆலைக்கு “சீல்” வைக்கப்பட்டதுடன் உரிமையாளர் கைது செய்யப்பட்டனர்.
தாயில்பட்டி:

தாயில்பட்டி அருகில் உள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புகனி (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பனையடி பட்டியில் உள்ளது.

இங்கு அனுமதி இன்றி பேன்சி ரக வெடிகள் தயாரிப்பாக வெம்பக்கோட்டை தாசில்தார் ராஜா உசேனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் பனையடி பட்டி கிராம நிர்வாக அலுவலர் தாழம்பூராஜா ஆகியோருடன் பட்டாசு ஆலையில் சோதனை நடத்தினர்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் சரவெடி மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால் இங்கு பேன்சி ரக வெடிகள் தயார் செய்ததை கண்டு பிடித்தனர்.

மேலும் பட்டாசு ஆலையில் 11 வயது சிறுமி வேலை செய்வதும் தெரியவந்தது. உடனடியாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் தாழம்பூராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் சுப்புகனியை கைது செய்தனர்.

அத்துடன் பட்டாசு ஆலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் “சீல்” வைத்தனர். மேலும் பட்டாசு ஆலையில் வைத்திருந்த 10 குரோஸ் கருந்திரி, மணி மருந்து, தயார் செய்யப்பட்ட பேன்சி ரகவெடிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News