செய்திகள்
தற்கொலை

சீர்காழி அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2021-02-24 09:08 GMT   |   Update On 2021-02-24 09:08 GMT
சீர்காழி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலதேனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. கட்டிட தொழிலாளியான இவருடைய மகள் இலக்கியா (வயது 18). இவர் பூம்புகார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி கல்லூரிக்கு போகாமல் விடுமுறையில் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த இலக்கியா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News