செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- கட்டிட தொழிலாளி கைது

Published On 2021-02-20 22:34 IST   |   Update On 2021-02-20 22:34:00 IST
மயிலாடுதுறையில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.











மயிலாடுதுறை:

மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). கட்டிட தொழிலாளி இவரது வீட்டின் அருகில் உள்ள டியூஷன் சென்டருக்கு வந்த 7-ம் வகுப்பு மாணவியை மூர்த்தி கடந்த 1½ ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அந்த சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது அங்கிருந்து மூர்த்தி தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News