செய்திகள்
போளூர் அருகே மணல் கடத்தியவர் கைது
போளூர் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரைப்பூண்டி செய்யாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தி வந்த போளூரை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் மணலுடன் வேனை பறிமுதல் செய்தனர்.