செய்திகள்
கோப்புபடம்

வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-02-17 12:02 GMT   |   Update On 2021-02-17 12:02 GMT
வேட்டவலம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேட்டவலம்:

வேட்டவலம் அருகே உள்ள பன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரது மூத்த மகன் பிரேம் (வயது21), வேட்டவலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், பன்னியூர் புறாக்கல் மலை அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News