செய்திகள்
தாயில்பட்டி அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
தாயில்பட்டி அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:
தாயில்பட்டி ஊராட்சி கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 52), பட்டாசு தொழிலாளி. இவர் வீட்டின் பின்புறத்தில் இருந்த ஓட்டையை அடைத்து கொண்டிருந்தபோது ஓட்டையில் இருந்து வந்த பாம்பு ஆபிரகாமை கடித்ததில் மயக்கமடைந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து ஆபிரகாம் மகள் ஆஷா கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.