செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவுக்கு விடை கொடுத்த திருவண்ணாமலை மாவட்டம்- பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2021-02-16 12:04 IST   |   Update On 2021-02-16 12:04:00 IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ‘பூஜ்ஜியம்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 19 ஆயிரத்து 109 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர்.

34 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 284 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.

Similar News