செய்திகள்
விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40), விவசாயி. இவர், இருசக்கர வாகனத்தில் முருகர் கோவில் அருகில் வந்த போது, சோ.புதூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் விஜய் (வயது 25) என்பவர் வழி மடக்கி கத்தியை காட்டி மிரட்டி, செந்தில்குமார் வைத்திருந்த ரூ.3 ஆயிரம், ஆதார்கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றை பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து, விஜயை கைது செய்தார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், கைதான விஜய் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது.