செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு

Published On 2021-02-08 10:20 GMT   |   Update On 2021-02-08 10:20 GMT
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.1 உயர்ந்து உள்ளது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு விவசாயிகள் தங்கள் தேயிலை தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை சிறு தேயிலை தொழிற்சாலை களுக்கு வழங்கி வருகிறார்கள். அந்த தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பினர் நடத்தும் தேயிலை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஏலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி விற்பனை எண் 5-க்கான ஏலம் நடந்தது. ஏலத்திற்கு மொத்தம் 13 லட்சத்து 64 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது.

இதில் 9 லட்சத்து 59 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலை தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 90 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது. அதன் அளவு 12 லட்சத்து 19 ஆயிரம் கிலோ ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.16 கோடியே 35 லட்சம் ஆகும்.

விற்பனையான அனைத்து ரக தேயிலை தூள்களுக்கும் கிலோ ரூ.1 விலையேற்றம் இருந்தது. சி.டி.சி. தேயிலை தூளின் உயர்ந்த பட்ச விலை கிலோ ஒன்று ரூ.301- என்றும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் உயர்த்தபட்ச விலை கிலோ ரூ.256 என்றும் விற்பனையானது.

சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை 1 கிலோ ரூ.109-ல் இருந்து ரூ.114 என்ற விலையில் ஏலம் சென்றது. விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.118-ல் இருந்து ரூ.125 என்ற விலையில் ஏலம் சென்றது.

டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.161-ல் இருந்து ரூ.226 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.165-ல் இருந்து ரூ.208 என்ற விலையில் ஏலம் சென்றது. அடுத்த ஏலம் வருகிற 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது.
Tags:    

Similar News