செய்திகள்
சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள கொத்தனேரி பஸ் நிறுத்தம் அருகில் எம்.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அந்த பெட்டிக்கடையில் சோதனை செய்த போது அங்கு 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முத்து (வயது 45), நாகராஜ் (50) ஆகியோரை கைது செய்தனர். கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.