செய்திகள்
விபத்து பலி

கீழ்வேளூர் அருகே ஸ்கூட்டர்- சரக்கு வேன் மோதல்: வாலிபர் பலி

Published On 2021-02-06 17:55 IST   |   Update On 2021-02-06 17:55:00 IST
கீழ்வேளூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே உள்ள ஆந்தக்குடி பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மகன் பிரபாகரன்(வயது18). புதுப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சலீம் மகன் ஷாஜகான்(19). ஆந்தக்குடியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (18). சம்பவத்தன்று பிரபாகரன், ஷாஜகான், ஆகாஷ் ஆகிய 3 பேரும் ஸ்கூட்டரில் கீழ்வேளூரில் இருந்து கீழ்வேளூர்- கச்சனம் சாலையில் தங்களது ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ஷாஜகான் ஓட்டினார்.

பட்டமங்கலம் நெல் கொள்முதல் நிலையம் அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு வேன், ஷாஜகான் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாஜகான் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாஜகான் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேனை ஓட்டிவந்த புதுச்சேரியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் சோமசுந்தரத்தை(42) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News