செய்திகள்
கோப்புபடம்

வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2021-02-06 17:05 IST   |   Update On 2021-02-06 17:05:00 IST
வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட நாகக்குடையான் கிராமம் நடுசாலையை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி மகாலட்சுமி(வயது45). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ ைவத்்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை

அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News