செய்திகள்
தற்கொலை

சாத்தூரில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

Published On 2021-02-05 12:14 IST   |   Update On 2021-02-05 12:14:00 IST
வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சாத்தூர்:

சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு முரளிதரன் (22) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகனுக்கு திருமணம் ஆகாத நிலையில் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். முரளிதரன் கேட்டரிங் படித்து உள்ளார்.

வேலை கிடைக்காத காரணத்தால் சாத்தூரில் லாரி கிளீனிராக வேலை பார்த்து வந்தார். முரளிதரனுக்கு சில மாதங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது .

இதனால் மன வேதனை அடைந்த முரளிதரன் சாத்தூரில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார் முரளிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி சரக ரெயில்வே போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒ.மேட்டுபட்டி கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Similar News