செய்திகள்
மரணம்

திருபுவனை அருகே தனியார் கல்லூரி பஸ் டிரைவர் திடீர் மரணம்

Published On 2021-02-04 20:01 IST   |   Update On 2021-02-04 20:01:00 IST
திருபுவனை அருகே தனியார் கல்லூரி பஸ் டிரைவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
திருபுவனை:

தவளக்குப்பம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 51). இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் காலை கல்லூரியில் இருந்து பஸ்சை கிளப்பிக்கொண்டு டீசல் போடுவதற்காக திருபுவனை அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு கண்ணன் சென்றார். அப்போது பஸ் பஞ்சரானது. உடனே அருகில் உள்ள பஞ்சர் கடைக்கு சென்று அங்கிருந்தவரை பஞ்சர் பார்க்க வருமாறு அழைத்தார். அப்போது கண்ணனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கண்ணனுக்கு பத்மபிரியா (44) என்ற மனைவியும், விசாலி (21), நெவர்தன (16) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

Similar News