செய்திகள்
ஈரோட்டில் காவிரி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
ஈரோட்டில் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நந்தகோபால் (வயது 15). 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் நந்தகோபால் ஈரோடு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வைராபாளையம் பகுதிக்கு சென்றார்.
பின்னர் அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது நந்தகோபால் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தகோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஏ.பி.டி. ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகன் நந்தகோபால் (வயது 15). 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது நண்பர்களுடன் நந்தகோபால் ஈரோடு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக வைராபாளையம் பகுதிக்கு சென்றார்.
பின்னர் அவர் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது நந்தகோபால் ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நந்தகோபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.