செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,925 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

Published On 2021-01-28 23:51 IST   |   Update On 2021-01-28 23:51:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1,925 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஈரோடு:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பவானி, கோபி அரசு ஆஸ்பத்திரி, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16-ந்தேதி முதல் கோவிஷுல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதல் 3 நாட்களில் நூற்றுக்கும் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் பின்னர் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தற்போது வரை அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை பணியாளர்கள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 13 ஆயிரத்து 800 கோவிஷுல்டு டோஸ்கள் வந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி முதல் நேற்று வரை 1,925 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 197 முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். தற்போது முதல் கட்டமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பிற துறை அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்படும். அதன் பிறகு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News