செய்திகள்
தற்கொலை

உடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2021-01-27 11:52 GMT   |   Update On 2021-01-27 11:52 GMT
உடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சசிகலா(வயது 20). கூலித்தொழிலாளியான இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், சசிகலாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சசிகலா கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, அவரை மீட்டு 108 அம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News