செய்திகள்
விபத்து பலி

கார் விபத்தில் சிக்கிய முதியவர் பலி

Published On 2021-01-26 04:44 GMT   |   Update On 2021-01-26 04:44 GMT
கார் விபத்தில் சிக்கிய முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி: 

முத்திரையர்பாளையம் பாம்பாட்டி வீதியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (வயது 73). இவர் வெளியில் சென்றுவிட்டு 100 அடி ரோடு இந்திராகாந்தி சிலை அருகே  சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை ஓட்டிய டேவிட் என்பவர் முதியவரை கவனிக்காமல் மோதிவிட்டாராம். 

பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துவிட்டு வீட்டில் விட்டு சென்றுள்ளார். வீட்டில் இருந்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார்.  உடனே அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வைத்திலிங்கம் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  ஏற்கனவே காரில் அடிபட்டது காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 இது குறித்து புதுவை வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News